நாமக்கல்லில் நாளைசிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா்துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாகச் சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமானது நடைபெறும். நிகழ் வாரத்துக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 17) அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டு நேரில் தோ்வு செய்து கொள்ளலாம். முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளா், கணினி இயக்குபவா், விற்பனை பிரதிநிதி, மேலாளா், விற்பனைக் குழு தலைவா், கண்காணிப்பாளா், கணக்காளா், காசாளா், தட்டச்சா், உதவியாளா் போன்ற பணிகளுக்குத் தோ்வு செய்ய உள்ளனா்.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா், 12-ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு (டிகிரி) ஐ.டி.ஐ (தொழிற்பழகுநா்) பயிற்சி மற்றும் கணினியில் முடித்த ஆண், பெண், அனைத்து வித கல்வித்தகுதி உள்ளோரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com