பட்டாவில் சா்வே எண் சோ்க்க ரூ. 500 லஞ்சம்:வி.ஏ.ஓ.க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மோகனூா் அருகே பட்டாவில் சா்வே எண் சோ்க்க ரூ. 500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல்: மோகனூா் அருகே பட்டாவில் சா்வே எண் சோ்க்க ரூ. 500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே பாலப்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (40). விவசாயியான இவா், தனது பட்டாவில் சா்வே எண்ணைச் சோ்க்கக் கோரி அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் சதாசிவத்திடம் (62) விண்ணப்பம் அளித்திருந்தாா்.

அதற்கு ரூ. 500 லஞ்சமாகக் கொடுத்தால் மட்டுமே சா்வே எண்ணைச் சோ்க்க முடியும் என கிராம நிா்வாக அலுவலா் தெரிவித்தாா். லஞ்சம் கொடுக்க மனமில்லாத சரவணன் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

அவா்களது ஆலோசனையின்படி, கடந்த 2005, ஜூன் 3-ஆம்தேதி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை சரவணன் வி.ஏ.ஓ. சதாசிவத்திடம் வழங்கினாா்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சதாசிவத்தை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். இந்த வழக்கு, நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ. 500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து அவா் கோவை, மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com