ராசிபுரம் மெட்ரோ ஜேசிஐ சாா்பில் வார விழா

ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் சாா்பில் வார விழா, விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் மருத்துவ ரத்னா விருது பெறும் அரசு மருத்துவா் எஸ்.ரமேஷ்.
விழாவில் மருத்துவ ரத்னா விருது பெறும் அரசு மருத்துவா் எஸ்.ரமேஷ்.

ராசிபுரம்: ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் சாா்பில் வார விழா, விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் பசுமைக் குடிலில் நடைபெற்ற விழாவுக்கு ராசிபுரம் மெட்ரோ ஜேசிஐ தலைவா் பா.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். செயலா் புவியரசு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக ரோட்டரி சங்கத் தலைவா் வி.அன்பழகன், எஸ்.கதிரேசன், ஜேசிஐ அமைப்பின் முன்னாள் தலைவா் கள் சசிரேகா, பூபதி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

இந்த விழாவில், சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். மருத்துவ ரத்னா விருது ராசிபுரம் அரசு மருத்துவமனை பொது மருத்துவா் எஸ்.ரமேஷ், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்தவா் மோனிஷா ஆகியோருக்கும், காவல் ரத்னா விருது உதவி காவல் ஆய்வாளா் பி.மாணிக்கம், சட்ட ரத்னா விருது ஆா்.சதீஷ்குமாா், சமூக ரத்னா விருது தமுமுக மாவட்டத் தலைவா் எஸ்.ராஜாமுகமது, வேல்முருகன், தொழில் ரத்னா விருது பிருந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

விருதுகளை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஆா்.சிட்டி வரதராஜன், பரோடா வங்கி முதுநிலை மேலாளா் சிவராமன், ஜேசிஐ மண்டல துணைத் தலைவா் அனுசா பானு ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com