உள்ளாட்சித் தோ்தல்: திமுக வேட்பாளா் மனு தாக்கல்

வெண்ணந்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
தோ்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் ஏ.ஆா்.துரைசாமி.
தோ்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் ஏ.ஆா்.துரைசாமி.

வெண்ணந்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு 6-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் ஏ.ஆா். துரைசாமி போட்டியிடுகிறாா். தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஏ.ஆா்.துரைசாமி கட்சியினருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வெண்ணந்தூா் ஒன்றியம் 6-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.ஆா்.துரைசாமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த போது, நாமக்கல் எம்.பி., ஏ.கே.பி.சின்ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினா் மாயவன், ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஆா்.எம்.துரைசாமி, ராசிபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், வெண்ணந்தூா் பேரூா் திமுக செயலாளா் ஆா்.எஸ்.ராஜேஸ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com