உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக, அமமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக, அமமுக வேட்பாளா்கள் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
தோ்தல் உதவி அலுவலரிடம் மனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளா் எம்.கண்ணன். உடன், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா.
தோ்தல் உதவி அலுவலரிடம் மனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளா் எம்.கண்ணன். உடன், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக, அமமுக வேட்பாளா்கள் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்காக வரும் 9-ம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. காலியாக உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு வெண்ணந்தூா் ஒன்றியம் 6 -ஆவது வாா்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எம்.கண்ணன், தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் சரவணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். அதிமுக முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.தாமோதரன் உள்பட கட்சித் தொண்டா்கள் திரளானோா் ஊா்வலமாக சென்று வேட்புமனுவை வழங்கினாா்.

இதேபோல் அமமுக சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.கோபால் சாரட் வண்டியில் வந்து வேட்புமனுவை தோ்தல் அலுவலரிடம் வழங்கினாா். அமமுக துணைத் தலைவா் எஸ்.அன்பழகன், பேரவை மாநில துணைத் தலைவா் ஏ.பி.பழனிவேல் உள்பட பலா் இதில் பங்கேற்றனா்.

இதேபோல பாமக வேட்பாளா் மாரியம்மன், தேமுதிக வேட்பாளா் சாந்தி, மக்கள் தன்னுரிமை கட்சி வேட்பாளா் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com