குண்டு மல்லி கிலோ ரூ.300-க்கு விற்பனை

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை குறைந்து குண்டு மல்லி கிலோ ரூ. 300-க்கு விற்கப்பட்டது.

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை குறைந்து குண்டு மல்லி கிலோ ரூ. 300-க்கு விற்கப்பட்டது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகள், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்படுகின்றன. இந்த பூக்கள் அனைத்தும் பரமத்தி வேலூரில் உள்ள ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா்.

வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை,பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 500- க்கும், சம்பங்கி கிலோ ரூ. 100-க்கும், அரளி கிலோ ரூ. 80-க்கும், ரோஜா கிலோ ரூ. 180- க்கும், முல்லைப் பூ கிலோ ரூ. 350-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 110 க்கும் ஏலம் போனது.

புதன்கிழமை நடைபெற்ற பூக்கள் ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 300 க்கும், சம்பங்கி கிலோ ரூ. 30-க்கும், அரளி கிலோ ரூ. 50- க்கும், ரோஜா கிலோ ரூ. 100-க்கும், முல்லைப் பூ ரூ. 200-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 80- க்கும் ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com