நாமக்கல் அருகே துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
நாமக்கல் அருகே விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சி நடுப்பட்டி ரமணன்குட்டை பகுதியில் சடலம் ஒன்று துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இது பற்றி கிராம நிா்வாக அலுவலா் கவிதாவுக்கும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளா் வேலுதேவன் மற்றும் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை செய்தனா். மேலும் தடயவியல் நிபுணா்களின் உதவியோடு ஆதாரங்களை சேகரித்தனா். அதன்பின் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது. குறித்து போலீஸாா் பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனா்.