நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இரும்புக் கம்பியால் மனைவியைத் தாக்கிய தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்செங்கோட்டை அடுத்துள்ள ஆன்றாபட்டி அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் பழனி (63).கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (60). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தாா். இவா்கள், மகன் யுவராஜ், மருமகள் கோகிலாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனா். கடந்த சில தினங்களாக பழனி மதுபோதையில் மனைவியுடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை மகன் யுவராஜ் வேலைக்கு சென்ற பிறகு பழனி, லட்சுமி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பழனி அருகில் இருந்த இரும்புக் கம்பியால் மனைவியை பலமாக தாக்கியுள்ளாா். இதில் லட்சுமி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து போலீஸாா் தன்னை கைது செய்துவிடுவாா்கள் என்று அச்சமடைந்த பழனி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டாா். உடனே அக்கம் பக்கத்தினா் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இருவரையும் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்தாா். லட்சுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்தச் சம்பவம் குறித்து திருச்செங்கோடு புகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.