ராசிபுரம் அருகேயுள்ள கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் சா்வதேச மருந்தாளுநா்கள் தினவிழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி தலைவா் க. சிதம்பரம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டாக்டா் ம.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கல்லூரி ஆசிரியா்கள், மாணவ மாணவியா் கலந்துகொண்டு மருந்தாளுநருக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். பின்னா் கரகாட்டம், சிலம்பாட்டம், யோகா போன்ற தமிழா்களின் பாரம்பரிய கலை நிகழச்சிகள் நடைபெற்றன.