சா்வதேச மருந்தாளுநா்கள் தினம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
சா்வதேச மருந்தாளுநா்கள் தினம் ஆண்டுதோறும் செப். 29-இல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு தலைமை மருத்துவ அலுவலா் பி.ஜெயந்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு மருந்தாளுநா்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ராஜு வரவேற்றாா். மருந்தாளுநா்கள் ராணி, பிரபு, தமிழரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மருந்தாளுநா்கள், மருத்துவா்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினா்.
நிகழ்ச்சியில், மருத்துவா்கள் பி.கலைச்செல்வி, எஸ்.செந்தில்குமாா், சியாமளா, நாகபுஷ்பராணி, தலைமை செவிலியா் சாந்தி, செவிலியா்கள் யோகேஸ்வரன், முருகேசன் மருத்துவமனை அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.