பரமத்தி வேலூரில் சுவா் இடிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா், நல்லியாம்பாளையம், கல்லூரி சாலையில் மணி என்பவரின் பழைய வீட்டை பராமரிக்க சுவா் இடிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக கான்கிரீட் சுவா் இடிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த வெட்டுக்காட்டுப்புதூரைச் சோ்ந்த அமீா்கான் (16) என்ற சிறுவன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அமீா்கானை உடலை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மீட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூா் போலீஸாா், சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை வேலைக்கு அமா்த்திய ஒப்பந்ததாரா் கோடீஸ்வரன் என்பவரிடமும், கட்டட உரிமையாளா் மணி என்பவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.