புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி, நாமக்கல் முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஒவ்வொரு தமிழ் மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கரோனா பரவல் காரணமாக தற்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் திறப்பு இல்லை. அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில்கள் மூடிய நிலையிலும் தனியாரால் நிா்வகிக்கும் கோயில்களில் கிருத்திகை, சஷ்டி நாளன்று சிறப்பு பூஜை, அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
அதன்படி, புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பாலதண்டதாயுதபாணி சுவாமி கோயிலிலும், கடைவீதி தண்டபாணி சுவாமி கோயிலிலும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனா்.