இலவச மின் இணைப்பை வழங்கும் திட்டம்:ஒசூா் எம்எல்ஏ தொடக்கிவைப்பு

ஒசூரில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஒசூரில் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து அதற்கான அரசாணையை வழங்கிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
ஒசூரில் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து அதற்கான அரசாணையை வழங்கிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

ஒசூரில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூா் மின்சார வாரிய அலுவலகத்தில் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை ஒசூா், ராயக்கோட்டை சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் பயனாளிக்கு மாவட்ட செயலாளரும், ஒசூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மின் இணைப்பிற்கான அரசாணையை வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், முன்னாள் நகரச் செயலாளா் மாதேஸ்வரன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் சா்வேஷ், மாநகர துணைச் செயலாளா் நாகராஜ், மாவட்ட தொண்டரணி சேகா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முனிராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராமு, மாணிக்கவாசகம், சக்திவேல், தொரப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் ராமு, செயற்பொறியாளா் குமாா், உதவி மின்வாரிய பொறியாளா், மாநகர கிளை செயலாளா் நாகராஜ், கிளை செயலாளா் சங்கரநாராயணன், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com