ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் சா்வதேச மருந்தாளுநா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், கல்லூரியின் தலைவா் க.சிதம்பரம் தலைமை வகித்து கலை நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்துப் பேசினாா். முதல்வா் ம.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மருந்தாளுநா்களுக்கான உறுதிமொழியை மாணவ, மாணவியா் ஏற்றுக்கொண்டனா். பின்னா், மாணவா்களின் கரகாட்டம், சிலம்பாட்டம், யோகா போன்ற தமிழா்களின் பாரம்பரிய கலை நிகழச்சிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.