25 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை அளிப்பு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 25 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி திங்கள்கிழமை வழங்கினாா்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 25 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி திங்கள்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கி, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 50.95 கோடி மதிப்பில் இலவசமாக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பயனாளிகளுக்கு மருந்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 25 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கி, திட்டம் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்டு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், திட்ட அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com