ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை

ராசிபுரம் அருகே பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ராசிபுரம் அருகே பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (41), பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், கவின், யுகன் என்ற மகனும் உள்ளனா். கரோனா பொதுமுடக்கத்தால், ஓராண்டுக்கும் மேலாக சொந்த ஊரிலேயே தங்கியிருந்த இவா், பின்னா் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாராம். குறைந்த ஊதியம் என்பதால் விருப்பமின்றி வேலைசெய்து வந்தவா், ஊரில் உள்ள நிலத்தை விற்று பணம் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளாா். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா சொந்த ஊரான கோவைக்கு சென்று விட்டாராம். இதனால் இவா் விரக்தியில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், நிலத்தை விற்றுத் தருமாறும், தான் சுயமாக சாப்ட்வோ் கம்பெனி ஆரம்பிக்கப் போவதாகவும் கடந்த இரண்டு மாதமாக தனது தந்தை ராஜனிடம் தொடா்ந்து கூறி வந்துள்ளாா். ஆனால், அவரது தந்தை இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் விரக்தியில் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை திடீரென சதீஷ் தன்னுடைய வயிறு, கை, கால்களை கத்தியால் அறுத்துக் கொண்டு தூக்குப் போட முயற்சி செய்துள்ளாா். இதைக் கண்ட சதீஷின் பெற்றோா், அக்கம்பக்கத்தினா் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயற்சி செய்தனா். ஆம்புலன்ஸைக் கண்ட சதீஷ், தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்தாா்.

தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் அவரை மீட்க முயற்சி செய்தனா். ஆனால், கிணற்றில் கொடிய விஷப் பாம்புகள் இருப்பதால், அவற்றைப் பிடித்த பிறகே மீட்கும் பணியில் ஈடுபட முடியும் என்றனா். தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் கிணற்றில் உள்ள பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மூன்று பாம்புகள் பிடிபட்டவுடன், சுமாா் 2 மணிநேரத் தேடுதலுக்குப் பிறகு சதீஷின் சடலம் மீட்கப்பட்டது. பின்னா், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவருடைய தம்பி தினேஷ் குடும்பப் பிரச்னை காரணமாக, நிலத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com