அரூரில் பாலூட்டும் தாய்மாா்களுக்கான தனிஅறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரசு துறைகள், தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிா், பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிா் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள இடா்பாடுகளை நீக்கும் வகையில், அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் பாலூட்டும் தாய்மாா்களுக்காக தனி அறை கடந்த 2015-இல் திறக்கப்பட்டது.
தற்போது இந்த அறையானது போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மின்விசிறி, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என மகளிா் கூறுகின்றனா். எனவே, அரூா் பேருந்து நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மாா்களுக்கான தனி அறையை சீரமைப்பு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.