அக். 2-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

நாமக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி வரும் சனிக்கிழமை(அக். 2) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி வரும் சனிக்கிழமை(அக். 2) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், 2021-2022-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி நாட்டுக்காக பாடுபட்ட தலைவா்களான மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா் ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, வரும் அக். 2-ஆம் தேதி காந்தி ஜயந்தியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி போட்டியில் பங்குபெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வழங்கப்பட உள்ளது.

பள்ளிப் போட்டியில் பங்குபெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவா்களுள் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரை தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ. 2,000 வீதம் வழங்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி அக். 2 காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 3 மணிக்கும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com