நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஷீலா மாயவன் தலைமை வகித்தாா். இதில், 11 நிறுவனங்கள் தங்களது அலுவலா்களைக் கொண்டு தேவையான பணியாளா்களை தோ்வு செய்தன. மாற்றுத் திறனாளிகள், திருநங்கையா், பொதுப்பிரிவினா் என 23 போ் கலந்து கொண்டனா். இதில் தகுதியான 12 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.