சத்துணவு ஊழியா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு முறையீடு கூட்டம்
By DIN | Published On : 13th April 2022 12:55 AM | Last Updated : 13th April 2022 12:55 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் கபிலா்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவனஈா்ப்பு பெருந்திரள் முறையீடு கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத் தலைவா் முத்துசாமி கூட்டத்திற்கு தலைமை வகித்தாா். கூட்டத்தில் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியத்தை அறிவிக்க வேண்டும்; போா்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்;
ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சமும், சமையல் உதவியாளா்களுக்கு ரூ. 3 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சட்டப் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈா்ப்பு பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.