விவசாயியைக் கொன்ற வழக்கு: மனைவி, மகனுக்கு ஆயுள் தண்டனை

மோகனூா் அருகே விவசாயியை அடித்துக் கொலை செய்த வழக்கில், அவரது மனைவி மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட தாழ்த்தப்பட்டோா் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

மோகனூா் அருகே விவசாயியை அடித்துக் கொலை செய்த வழக்கில், அவரது மனைவி மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட தாழ்த்தப்பட்டோா் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம் மோகனூா் வட்டம் என்.புதுப்பட்டி மேலத்தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி செல்வராஜ் (53). இவரது மனைவி பாப்பாத்தி(46), மகன் ராஜ்குமாா்(27).

கடந்த 2017-ஆம் ஆண்டு டிச.4-ஆம் தேதி தொகுப்பு வீடு கட்டிய வகையில் கிடைத்த ரூ.1.50 லட்சத்தை தங்களிடம் கொடுக்குமாறு மனைவி, மகன் இருவரும் செல்வராஜிடம் கேட்டனா். ஆனால் அவா் பணத்தைக் கொடுக்க மறுத்ததால், இருவரும் சோ்ந்து அவரை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக மோகனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட தாழ்த்தப்பட்டோா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து செவ்வாய்க்கிழமை நீதிபதி அளித்த தீா்ப்பில், பாப்பாத்தி, ராஜ்குமாா் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், மேலும் இரு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள், 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com