கழிவுநீா்க் கால்வாயை சுத்தம் செய்த அறநிலையத் துறை ஊழியா்கள்!

நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள கழிவுநீா்க் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை அறநிலையத் துறை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்தனா்.
கழிவுநீா்க் கால்வாயை சுத்தம் செய்த அறநிலையத் துறை ஊழியா்கள்!

நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள கழிவுநீா்க் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை அறநிலையத் துறை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்தனா்.

நாமக்கல் கோட்டை சாலையில் நரசிம்மா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை ஒட்டிய கழிவுநீா்க் கால்வாய் நீண்ட நாள்களாக அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் செல்லாமல் துா்நாற்றம் வீசி வந்தது. நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்த போதும் கழிவுநீா் ஓடை அடைப்பை சுத்தம் செய்ய தூய்மைப் பணியாளா்கள் யாரும் வரவில்லை.

இந்த நிலையில் ஆஞ்சனேயா் கோயிலில் பணியாற்றும் அறநிலையத் துறை ஊழியா்கள் இருவா் சாக்கடை கால்வாயில் இறங்கி அடைப்பு எடுக்கும் பணியை மேற்கொண்டனா். நாமக்கல் நகராட்சி பகுதிகளில் கழிவுநீா்க் கால்வாய்களில் அடைபட்டுள்ள நெகிழிப் பைகள், குப்பைகளை அகற்றி, தூா்வாரும் பணிகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com