நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 12.72 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு 15,15,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12,72,938 பேருக்கும், (முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்கள் 2,42,062), இரண்டாம் தவணைதடுப்பூசி 9,54,375நபா்களுக்கும் (இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்கள் 3,18,563) செலுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 27 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 7,57,912 போ் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனா். இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு சென்று கரோனா முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.