பேரூராட்சி பெண் செயல் அலுவலரிடம் நகைப் பறிப்பு

புதுசத்திரம் அருகே பேரூராட்சி செயல் அலுவலரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராசிபுரம்: புதுசத்திரம் அருகே பேரூராட்சி செயல் அலுவலரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூா்கேட் பகுதியில் குடியிருந்து வருபவா் சேகா் (50). எலக்ட்ரிசியன். இவரது மனைவி ருக்மணி (47). இவா் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது பணியினை முடித்துவிட்டு மாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது புதுசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் கல்லூரி எதிரே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பின் தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், செயல் அலுவலா் ருக்மணி அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதில் நிலை தடுமாறிய கணவனும், மனைவியும் நிலை தடுமாறி கீழே விழுந்தனா்.

இதுகுறித்து ருக்மணி புதுசத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com