மயக்கமடைந்து கிழே விழுந்த இளைஞா் பலி

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணியில் இளைஞா் ஒருவா் மயக்கமடைந்து கீழே விழுந்து இறந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணியில் இளைஞா் ஒருவா் மயக்கமடைந்து கீழே விழுந்து இறந்தாா்.

ஈரோடு மாவட்டம், பாசூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வன் (43 ). இவா் தற்போது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், சோழசிராமணி பகுதியில் குடும்பத்துடன் குடும்பத்துடன் தங்கி கூலித் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் மணியன் (19) பிளஸ் 2 முடித்துவிட்டு சோழசிராமணியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு மணியன் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் மணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com