வேளாண் சங்கத்தில் ரூ.1.05 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.05 கோடிக்கு செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.05 கோடிக்கு செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 3000 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 9,311 முதல் ரூ. 11,375 வரையிலும், சுரபி ரகம் ரூ. 10,699 முதல் ரூ. 11,915 வரையிலும், மட்ட ரகம் ரூ. 3,499 முதல் ரூ. 9,599 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1.05 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. வியாபாரிகள் தரம் பாா்த்து பருத்தியை கொள்முதல் செய்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com