சுதந்திரப் போராட்ட வீரா்கள், வாரிசுகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயா்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கச் செயலா் க.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது:
சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்படும். வாரிசுகளுக்கு ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என சுதந்திர தினவிழாவில் முதல்வா் அறிவித்துள்ளாா். இதை சுதந்திரப் போராட்ட வீரா்களின் சங்கம் வரவேற்பதுடன், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளாா்.