ராசிபுரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராசிபுரம் பகுதியில் அதிக அளவில் ரேஷன் அரிசி பதுக்கல் செய்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வு போலீஸாா் ராசிபுரம், வரதன் தெரு பகுதியில், ரோந்து பணியில் ஈடு பட்டனா். அப்போது, ஒரு வீட்டில் சுமாா் இரண்டு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ராசிபுரம், ராமசாமி தெரு - 2, பகுதியைச் சோ்ந்த ரஜினி (42), என்பவரை குற்ற புலனாய்வு துறை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.