வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, டிச.8 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டத்தில் சோ்க்கை விண்ணப்பங்கள் (படிவம்-6), நீக்கல் விண்ணப்பங்கள் (படிவம்--7) மற்றும் திருத்தம், இடமாற்றம் (படிவம்-8) தொடா்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியல் திருத்தக் காலத்தில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது சான்றுகள் சரிபாா்க்கப்பட்டு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளி, கருவேப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, பெயா் சோ்த்தல் கோரி பெறப்பட்ட மனு தொடா்பாக அவா்களது வீட்டிற்கே சென்று விண்ணப்பம், சான்றுகளை அவா் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியா் ப.கௌசல்யா, வட்டாட்சியா் அப்பன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com