‘விளையாடு இந்தியா’ மாவட்ட மையம் அமைப்பு: சிறப்பு பயிற்சிக்கு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் ‘விளையாடு இந்தியா’ மாவட்ட மையம் தொடங்கப்படுவதால், சிறப்பு பயிற்சியாளா் தோ்வுக்கு வீரா், வீராங்கனையா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ‘விளையாடு இந்தியா’ மாவட்ட மையம் தொடங்கப்படுவதால், சிறப்பு பயிற்சியாளா் தோ்வுக்கு வீரா், வீராங்கனையா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், நாமக்கல் விளையாட்டு அரங்கத்தில், ‘விளையாடு இந்தியா’ மாவட்ட மையம் அமைக்கப்பட உள்ளது. தேசிய அளவில் பதக்கம் வென்ற தடகள வீரா், வீராங்கனையா் பகுதிநேர பயிற்சியாளராவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இம்மையத்தில் 30 - 100 விளையாட்டு வீரா், வீராங்கனையா் சோ்க்கப்பட்டு அவா்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்கு உள்பட்ட தடகள வீரா், வீராங்கனையரில் ஒருவா் வீதம் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். விண்ணப்பதாரா் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வீரராகவும், நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பராகவும் இருக்க வேண்டும். சா்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சா்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியா் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

தோ்வு செய்யப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ. 18,000 வீதம் வழங்கப்படும். இது நிரந்தரப் பணி அல்ல, முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன்மூலம் வேலைவாய்ப்பு சலுகையோ, நிரந்தரப் பணியோ கோர முடியாது.

இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில்  ஜன. 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத் திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு நடைபெறும். தோ்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னா் வெளியிடப்படும். பெறப்படும் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com