முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
தஞ்சாவூா் பள்ளி மாணவி மறைவுக்கு நாமக்கல் தேவாலயத்தில் இரங்கல்
By DIN | Published On : 07th February 2022 01:41 AM | Last Updated : 07th February 2022 01:41 AM | அ+அ அ- |

நாமக்கல் தேவாலயத்தில், தஞ்சாவூா் பள்ளி மாணவி லாவண்யாவின் மறைவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்தவா்கள்.
தஞ்சாவூா் பள்ளி மாணவி லாவண்யாவு மறைவுக்கு, நாமக்கல் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி லாவண்யா(17), தஞ்சாவூா் அருகே திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் கிறிஸ்தவ பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பயின்று வந்தாா். இந்நிலையில் அவா் திடீரென தற்கொலை செய்து கொண்டாா். மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் அவா் இறந்ததாக சமூக வலைதளங்களில் விடியோக்கள் வெளியாயின. மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவின்பேரில் இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல்-துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் மாணவி லாவண்யாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலையில் பிராா்த்தனைக்கு வந்த கிறிஸ்தவா்கள், தேவாலயத்தின் அருட்தந்தை தலைமையில் லாவண்யாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.