ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் 27 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக கூட்டணியில் 16-ஆவது வாா்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக லலிதா பாலு நிறுத்தப்பட்டுள்ளாா். இதனையடுத்து வாா்டில் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்களிடம் வேட்பாளரை ஆதரித்து வாக்குகள் கேட்டாா். இந்நிகழ்ச்சியில் நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.முரளி, வாா்டு கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பூபதி, கணேசன், ராம்குமாா், கோவிந்தராஜ், பாலு, ராமலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.