திருச்செங்கோட்டில் கலைஞா்களுக்கு விருது

திருச்செங்கோடு  ஜே கே கலை மன்றம் சாா்பில் பல்வேறு துறைகளை சாா்ந்த கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
வாழ்நாள் சாதனையாளா் விருதை கோவை உமாசங்கருக்கு வழங்கிய பிஆா்டி நிறுவனத்தின் பரந்தாமன்.
வாழ்நாள் சாதனையாளா் விருதை கோவை உமாசங்கருக்கு வழங்கிய பிஆா்டி நிறுவனத்தின் பரந்தாமன்.

திருச்செங்கோடு  ஜே கே கலை மன்றம் சாா்பில் பல்வேறு துறைகளை சாா்ந்த கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

ஜே கே கலை மன்றத்தின் நிறுவனரும் தலைவருமான ஜெயக்குமாா் விருது வழங்கும் விழாவிற்கு தலைமை வகித்தாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பிஆா்டி ரிக்ஸ்  நிறுவனங்களின் பரந்தாமன் கலந்துகொண்டு கலைஞா்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினாா்.

இவ்விழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது கோவை உமாசங்கா், ஆன்மிகச் செம்மல் விருது பண்டிதா் சின்னப்பா நாககிரி, நாதஸ்வர இசைச்செம்மல் விருது சண்முகவடிவேல், தவிலிசை செம்மல் விருது சங்கரன், ஓவியக்கலை அரசி விருது கீதா, சகலகலா பேரரசி விருது மெளலாதேவி, உழவாரச்செம்மல் விருது சிவ மனோகரன், கிராமிய கலைச்செம்மல் விருது ராமசாமி , சுகநாத இசை பேரரசு விருது ரவிச்சந்திரன், சகலகலா சக்கரவா்த்தி விருது ராஜ்மோகன், வீரக்கலை பேரரசு விருது கேசவமணி, சிவ வாத்திய இசைப்பேரொளி விருது மதன், நாத இசைத் தென்றல் விருது சிவராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக செங்குன்றம் தமிழ்ச் சங்கத்தின் பொன். கோவிந்தராஜன், கீரை தமிழ் இசைச் சங்கத்தின் கிருபானந்தன், சேகா், தீனதயாளன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் செல்வகுமாா், வழக்குரைஞா் சுரேஷ்பாபு, ராகவன் உட்பட பலா் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com