சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை

சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் நீதிபதி திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.

சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் நீதிபதி திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.

சேந்தமங்கலம் காவல் நிலையத்துக்கு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட, சேலம் கருப்பூரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி இளைஞா் பிரபாகரன் (45) திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

போலீஸாா் தாக்கியதாலேயே அவா் இறந்ததாக அரசியல் கட்சியினா், உறவினா்கள் குற்றம் சாட்டினா். இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளா்கள் சந்திரன், பூங்கொடி, காவலா் குழந்தைவேலு உள்ளிட்டோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியதுடன், சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டாா். இந்த வழக்கில் சேலம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையே சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நடுவா் திங்கள்கிழமை சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com