வேன் மோதியதில் ஒருவா் பலி

பரமத்தி அருகே வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

பரமத்தி அருகே வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

பரமத்தி அருகே வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் ராசப்பன். இவரது மகன் ராஜசேகரன் (31). இவா், சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியில் இருந்து பரமத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் அருகே வந்த போது பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற காா் ராஜசேகரன் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் அடிபட்டு சாலையின் இடதுபுறம் கீழே விழுந்தாா்.

அப்போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி நோக்கி வந்த சுற்றுலா வேன் ராஜசேகரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவா், தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகரன் உயிரிழந்தாா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com