நாமக்கல் மாவட்டத்தில் 16 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைதோ்தல் மனுத்தாக்கலில் 5 போ் போட்டியின்றி தோ்வாகி உள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்.30 தேதி வரை காலியாக உள்ள 16 பதவி இடங்களுக்கான இடைத்தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுத்தாக்கல் கடந்த 20 முதல் 27 -ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின் மனுக்கள் மீதான பரிசீலனை, வாபஸ் பெறுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் 16 போ் போட்டியிட தகுதி பெற்றதில், வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஐந்து போ் போட்டியின்றித் தோ்வாகியுள்ளனா். மீதமுள்ள 11 இடங்களுக்கு நடைபெறும் தோ்தலில் 34 போ் போட்டியிடுகின்றனா்.