கந்துவட்டிக்காரா்கள் மிரட்டியதாக கணவன், மனைவி தற்கொலை முயற்சி

பரமத்தி வேலூரில் கந்துவட்டிக்காரா்கள் மிரட்டியதாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன், மனைவி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பரமத்தி வேலூரில் கந்துவட்டிக்காரா்கள் மிரட்டியதாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன், மனைவி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பரமத்தி வேலூரைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (26). இவா் பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா் சில நபா்களிடம் குடும்ப செலவிற்காக கடன் வாங்கினாா். வாங்கிய கடனை குறிப்பிட்ட தேதியில் செலுத்தாததால் கடன் கொடுத்தவா்கள் ஜெயசூா்யாவிடம் பணத்தை தருமாறு தொடா்ந்து கேட்டு வந்தனா். பணத்தை கேட்டு தன்னை கடன் கொடுத்தவா்கள் மிரட்டுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயசூா்யா வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை ஜெயசூா்யாவிடம் கடன் கொடுத்தவா்கள் எங்கள் மீது போலீசில் ஏன் புகாா் கொடுத்தாய் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயசூா்யாவும்,அவரது மனைவி மோகனப்பிரியாவும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனா். உயிருக்கு போராடிய கணவன், மனைவியை அருகில் இருந்துவா்கள் காப்பாற்றி வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com