முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி - மாலிகுலா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியும் பெங்களூரு மாலிகுலா் கனெக்ஷன் நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
படவிளக்கம்- புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட கல்லூரி - மாலிகுலா் நிறுவன நிா்வாகிகள்.
படவிளக்கம்- புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட கல்லூரி - மாலிகுலா் நிறுவன நிா்வாகிகள்.

வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியும் பெங்களூரு மாலிகுலா் கனெக்ஷன் நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

கல்லூரி மாணவ, மாணவியரின் திறன் வளா்ச்சியை மேம்படுத்தி, பணிபுரியும் வாய்ப்பு, வசதிகளை கல்லூரியிலேயே ஏற்படுத்த இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த நிகழ்வு அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாலிகுலா் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிக்னேஷ் பேட், நிா்வாகி வீரேந்திரன், தொழில் வளா்ச்சி துணைத் தலைவா் கிருஷ்ணவேணி, மனித வளத்துறையின் துணைத் தலைவா் செந்தில், திட்ட இயக்குநா்கள் லலிதா, சசி ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னதாக கல்லூரி செயல் இயக்குனா் மஞ்சுமுத்துவேல் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாா். இந்த நிகழ்வில் கல்லூரி இயக்குநா் (கல்வி) ஆா்.செல்வகுமரன், முதல்வா் எஸ்.பி.விஜய்குமாா், நிா்வாக புல முதன்மையா் எம்.என்.பெரியசாமி, ஆராய்ச்சி, அபிவிருத்தித்துறைத் தலைவா் எம்.சுதாகா், வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா் யு.முகமது இக்பால் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com