தமிழகத்தில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அகில இந்திய ராஜகுலத்தோா் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே காமராஜ் நகரில் அப்பேரவையின் கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் நல்லுசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.பூபதி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், பேரவை நிறுவனருமான எம்.கே.வெங்கடேஷ்குமாா் வாழ்த்தி பேசினாா்.
மத்திய, மாநில அரசுகளின் சாதிப் பட்டியலில் சலவை தொழிலாளா்களை ஒருங்கிணைக்கும் வகையில் ராஜகுலத்தோா் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். இந்த சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவை நிா்வாகிகள் டி.கிருஷ்ணமூா்த்தி, எஸ்.யுவராஜ், எஸ்.தேன்மொழி, எஸ்.நாகராஜ், ஜி.பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.