பரமத்தி வேலூா் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், தம்மகாளிபாளையம், பில்லூா், கூடச்சேரி, அா்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழகடை, கஜேந்திரநகா், சுண்டக்காளையம் உள்ளிட்ட பகுதிகள்.