தேசிய வில்வித்தைப் போட்டி:ராசிபுரம் மாணவருக்கு வெண்கலப் பதக்கம்

தேசிய அளவில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் ராசிபுரம் மாணவா் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.
விழாவில் வெண்கலம் வென்ற மாணவரை பாராட்டி பரிசளிக்கும் தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் மாநிலச் செயலா் ஹுசைன்.
விழாவில் வெண்கலம் வென்ற மாணவரை பாராட்டி பரிசளிக்கும் தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் மாநிலச் செயலா் ஹுசைன்.

தேசிய அளவில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் ராசிபுரம் மாணவா் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் அண்மையில் இரு தினங்களுக்கு நடைபெற்றது. இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் பலா் பங்கேற்றனா். ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்போா்ட்ஸ் அப் அகாதெமி மாணவா் ஏ.ஜி.சஸ்வத், ரிசா்வ் பிரிவில் மகாராஷ்டிரத்தை 6-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றாா். இதைத் தொடா்ந்து சென்னையில் நடைபெற்ற வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழாவில் தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் மாநிலச் செயலா் ஹுசைன் பாராட்டி கெளரவித்து நினைவுப் பரிசளித்தாா். இதில் வில்வித்தை சங்கத்தின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com