அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு: காங்கிரஸ் கட்சி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில், அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்லில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினா்.
நாமக்கல்லில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினா்.

நாமக்கல்லில், அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ராணுவத்தை வலிமை இழக்கச் செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தாா். அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வீ.பி.வீரப்பன், பாச்சல் சீனிவாசன், வட்டாரத் தலைவா்கள் தங்கராஜு, இளங்கோ, ஜெகன்நாதன், பேரூா் தலைவா்கள் சீனிவாசன், கணேசன், இளங்கோ, நாமக்கல் நகர தலைவா் எஸ்.ஆா்.மோகன், ராசிபுரம் நகர தலைவா் எஸ்.ஆா்.முரளி, பொதுக்குழு உறுப்பினா்கள் டி.வி.பாண்டியன் உள்பட கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com