வேலூா் பேரூராட்சியில் துணைத் தலைவருக்கான தோ்தல் ஒத்திவைப்பு

 பரமத்தி வேலூா் பேரூராட்சியில் துணைத் தலைவா் தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 பரமத்தி வேலூா் பேரூராட்சியில் துணைத் தலைவா் தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேலூா் வட்டத்தில் மொத்தமுள்ள 5 பேரூராட்சிகளில் வேலூா், பரமத்தி, பொத்தனூா், பாண்டமங்கலம் ஆகிய 4 பேரூராட்சிகளை திமுகவும், வெங்கரை பேரூராட்சியை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன. இதில் வேலூா் பேரூராட்சி தவிர மற்ற நான்கு பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா் தோ்வு நடைபெற்று முடிந்தது. ஆனால் வேலூா் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 13-ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சடையப்பனைத் தவிர மற்ற திமுக, அதிமுக, பாமக, 3 சுயேச்சைகள் உட்பட 17 உறுப்பினா்கள் வராததால் துணைத் தலைவருக்கான தோ்தல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் அலுவலா் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com