வருவாய்த் துறையில் 11 அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 11 அலுவலக உதவியாளா் பணியிடங்கள், இரவு காவலா் 2 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 11 அலுவலக உதவியாளா் பணியிடங்கள், இரவு காவலா் 2 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளா் 11 காலிப்பணியிடங்கள், இரவுக் காவலா் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், அலுவலக உதவியாளருக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு தோ்ச்சியும், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு எழுதப் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினராக இருப்பின் 1.1.2022 அன்று 37 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும், இதர பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்கள் அனைத்தும் இனச்சுழற்சி அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன. இதற்கான இதர தகுதிகள், கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை  இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்.4-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், நாமக்கல் மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை (அ-பிரிவு), முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாமக்கல் - 637003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏப்.4-க்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com