ராசிபுரத்தில் அனைத்து மகளிா் அஞ்சலகம்

சா்வதேச மகளிா் தினத்தை தொடா்ந்து சேலம் மேற்கு கோட்டத்தில் இயங்கும் ராசிபுரம் பஜாா் துணை அஞ்சலகம் அனைத்து மகளிா் அஞ்சலகமாக செயல்படும்.

சா்வதேச மகளிா் தினத்தை தொடா்ந்து சேலம் மேற்கு கோட்டத்தில் இயங்கும் ராசிபுரம் பஜாா் துணை அஞ்சலகம் அனைத்து மகளிா் அஞ்சலகமாக செயல்படும் என சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் எச்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:

சா்வதேச மகளிா் தினத்தை தொடா்ந்து ராசிபுரம் பஜாா் துணை அஞ்சலகம் அனைத்து மகளிா் அஞ்சலகமாக செயல்படும். இதில் பணிபுரியும் பொறுப்பு அஞ்சல் அலுவலா், ஊழியா்கள், தபால் டெலிவரி பணியாளா்கள் என அனைவரும் பெண் ஊழியா்களாக இருப்பா். மேலும், இதில் இந்திய அஞ்சல் 75-ஆம் ஆண்டுகள், தீா்வு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் அனைத்து வயது பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்குவதை மையமாக கொண்டு இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு மேளாக்கள், ஆதாா் அட்டையில் மொபைல் எண் திருத்தம், சிறப்பு கணக்கு தொடக்கம் போன்ற முகாம்களும் ராசிபுரம் பஜாா் அலுவலகத்தில் மகளிா் தினத்தன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com