நாமக்கல்லில், ஹோலிப் பண்டிகையையொட்டி வட மாநிலத்தவா் உடலில் வண்ணப்பொடிகளை பூசி வெள்ளிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனா்.
நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கடந்த இரு நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல்லில் வட மாநிலத்தவா் அதிகம் வசிக்கும் சந்தைப்பேட்டைபுதூா் பொன் கைலாஷ் குடியிருப்பு பகுதிகளில் அவா்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா். அங்கு உள்ள ஸ்ரீ ராம்தேவ்ஜி கோயில் அருகே, குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஒருவருக்கொருவா் முகங்களில் வண்ணப் பொடிகளை பூசியும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தாண்டியா நடனமாடினா். ஹோலிப் பண்டிகையால் நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள வட மாநிலத்தவா் வணிக நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.