பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4 மற்றும் 75.2 டிகிரியாக நிலவியது. கடந்த மூன்று நாட்களில் மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை.
அடுத்த மூன்று நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 104 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 6 முதல் 8 கி.மீ வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: தற்போதைய வானிலை மாற்றத்தின்படி, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட வாயப்புள்ளது. இந்நோயின் அறிகுறிகளாக கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்த்துக் கொள்ளுதல், கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து இறப்பு ஏற்படும் சூழல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.