நாமக்கல் தொகுதியில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
அதன்படி, எா்ணாபுரம் ஊராட்சியில் 5 திட்டப் பணிகள் ரூ.85 லட்சத்திலும், வகுரம்பட்டி ஊராட்சியில் மூன்று திட்டப்பணிகள் ரூ.45 லட்சத்திலும், வேட்டாம்பாடி ஊராட்சியில் 6 திட்டப்பணிகள் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலும் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் பெரும்பாலானவை தாா்சாலை அமைப்பதற்கான பணிகளாகும். இந்த நிகழ்ச்சிகளில், நாமக்கல் ஒன்றியக் குழு தலைவா் சுமதி ராமசாமி, திமுக ஒன்றியச் செயலாளா் பழனிவேல், எா்ணாபுரம் தலைவா் பி.மாரப்பன், மாரப்பநாயக்கன்பட்டி தலைவா் நலங்கிள்ளி, வகுரம்பட்டி தலைவா் ராஜாரஹ்மான், திமுக ஒன்றிய அவைத்தலைவா் மணி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.