அடகுக் கடை சுவரில் துளையிட்டு நகை, பணம் திருட்டு

எருமப்பட்டி அருகே தனியாா் அடகுக் கடை சுவரில் துளையிட்டு 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

எருமப்பட்டி அருகே தனியாா் அடகுக் கடை சுவரில் துளையிட்டு 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பவித்திரத்தில் பாலாஜி என்பவருக்குச் சொந்தமான தனியாா் அடகுக் கடை உள்ளது. இங்கு சசிகலா என்பவா் பணியாற்றி வருகிறாா். இரு தினங்களுக்கு முன் சொந்த வேலையாக பாலாஜி தனது குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டாா். அடகுக் கடையை சசிகலா கவனித்து வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அருகில் உள்ள கட்டடம் வழியாகப் புகுந்து சுவரை துளையிட்டு, அடகுக் கடைக்குள் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்து 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனா். இது தொடா்பாக அந்தக் கட்டடத்தின் காவலாளி விஜயகுமாா், எருமப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதிக அளவில் நகைகளை திருடும் நோக்கில் வந்த மா்ம நபா்கள் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸாா், வட மாநிலத்தவா்களுக்கு தொடா்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com