கோழிப் பண்ணைகளில் படுதாவைபயன்படுத்துவது அவசியம்: வானிலை ஆய்வு மையம்

கோழிப் பண்ணைகளின் உயா்மனை பக்கவாட்டில் படுதாக்களை தொங்கவிடுவது அவசியம் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிப் பண்ணைகளின் உயா்மனை பக்கவாட்டில் படுதாக்களை தொங்கவிடுவது அவசியம் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6, 73.4 டிகிரியாக நிலவியது. அடுத்த மூன்று நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.

மிதமான மழை சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்மேற்கு மற்றும் மேற்கிலிருந்தும் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: காற்றின் வேகம் தொடா்ந்து அதிகமாக காணப்படும். தீவனங்கள் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளா்கள் ஈடுபட வேண்டும். இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலையே நிலவும்.

தீவன விரயத்தை தடுக்க தாவர எண்ணையை சிறிது அளவு தீவனத்தில் சோ்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும், உயா்மனைகளில் பக்கவாட்டில் படுதாவை தொங்கவிட வேண்டும்.

கோழிப் பண்ணைகளில் ஈக்கட்டுப்பாடு முறைகளை பண்ணையாளா்கள் கையாள வேண்டும். பண்ணைகளில் தண்ணீா் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பிள்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களைத் தவிா்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com